நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஏபி-யில் மீண்டும் இணைந்தார் தோனி புவா

கோலாலம்பூர்:

 டிஏபி-யில் கட்சியில் மீண்டும் தோனி புவா இணைந்ததை அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார். 

டாமான்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தோனி புவாவை டிஏபியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராக நியமிக்க மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு டிஏபி மத்திய செயற்குழுவில் (CEC) இடம் பெற முடியாததால், தோனி புவா15-ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் போனது. 

தற்போது அவர்  கட்சியின் மத்திய தலைமைக்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அவர் செவ்வனே செய்வார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதையும் அந்தோனி லோக் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset