செய்திகள் மலேசியா
தடுப்பூசி எடுக்க மறுத்த ஆசிரியையை பணிநீக்கம்; நிர்வாகத்தின் முடிவில் தவறில்லை: தொழில் நீதிமன்றம் தீர்ப்பு
பெட்டாலிங் ஜெயா:
கோவிட்-19 தடுப்பூசி எடுக்க மறுத்ததால், ஷா ஆலமில் உள்ள தனியார் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்ட டிபு என்ற ஆசிரியரின் வழக்கு, தொழில் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2021-ல் அந்த பள்ளியில் RM15,500 ஊதியத்தில் பணியில் சேர்ந்த டிபு, அலெர்ஜி காரணமாக தடுப்பூசி எடுக்க முடியாது எனவும், தடுப்பூசி கட்டாயம் செய்யும் சட்டம் எதுவும் பணி ஒப்பந்தத்தில் இல்லையெனவும் வாதிட்டார் என FMT செய்தி வெளியிட்டுள்ளது
ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தடுப்பூசி விவகாரத்தில் பலமுறை பல காரணங்களை தெரிவித்தார் என்றும், அதோடு அவர் தடுப்பூசி எடுக்க மறுப்பது, ஒப்பந்த விதிகளையும், ஊழியர் பாதுகாப்பு சட்டத்தையும் மீறுகிறது” என்று பள்ளி நிறுவனம் கூறியது.
நிறுவனம் ஊழியர்களுக்காக தடுப்பூசி செலவையும் எற்றதாகவும், Zoom சந்திப்பு வாயிலாக கொள்கைகள் விளக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரது விசாவை ரத்து செய்து 9 நாட்களில் நாடு விட்டு செல்லச் சொன்னதற்கும் டிபு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட் ஆசிரியரின் வேலை நேரடி தொடர்புகள் தேவைப்படும் பணியாக இருந்ததால், தொலைபயன்பாட்டு ஏற்பாடுகள் சாத்தியமில்லை. தடுப்பூசி மறுப்பு முறையற்றது,என தொழிற் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
