செய்திகள் மலேசியா
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
கிள்ளான்:
மோட்டார் சைக்கிள் விற்பனை கடைக்கு முன் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று மதியம் மேருவின் தாமான் மேரு உத்தாமாவில் நிகழ்ந்தது என்று வட கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் எஸ். விஜயராவ் கூறினார்.
சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 3.37 மணிக்கு அப்பகுதியில் பணியில் இருந்த ரோந்து வீரர்களிடமிருந்து கிடைத்தது.
தகவல் கிடைத்தவுடன், ஒரு போலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
முதற்கட்ட விசாரணையில் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஆடவர் இறந்து கிடந்தார். அவர் சுமார் 46 வயதுடைய உள்ளூர் ஆடவர் என கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் பின்னர் மருத்துவப் பணியாளர்களால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சந்தேக நபரையும் சம்பவத்திற்கான காரணத்தையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விஜய ராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
March 19, 2026, 10:46 am
பெர்சத்துவில் தொடர்ச்சியான மோதல்: பத்ருல் ஹிஷாம் கட்சியிலிருந்து நீக்கம்
March 19, 2026, 10:13 am
