நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி

கோலாலம்பூர்:

அரசைக் கவிழ்க்க முயன்றது,  தேசிய நிலைத்தன்மைக்கு எதிரான நாசவேலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய, மேலும் 14 நபர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள்.

இந்த வழக்கின் சுமுகமான விசாரணைக்கு உதவுவதற்காக, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ  முகமது காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் போலிஸ்  விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் சுமார் 14 நபர்கள் அழைக்கப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

அனைத்து செயல்முறைகளும் முடிந்தவுடன், விசாரணை ஆவணங்கள் முடிக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் இன்று இங்குள்ள புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் பதிவு செய்யப்படுபவர்களில், மறைந்த துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி, நைமா அப்துல் காலித் அவர்களும் உள்ளாரா என்று கேட்கப்பட்டபோது, ​​அவர் அந்த விஷயத்தை வெளியிட மறுத்துவிட்டார்.

நான் தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை, மேலும் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset