நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து சயாப் பெர்செகுது பிரிவு ஆதரவை வலுப்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்: சஞ்ஜீவன்

பெட்டாலிங்ஜெயா:
பெர்சத்து கட்சியின் சயாப் பெர்செகுது பிரிவு கட்சியின் அனைத்து மட்டங்களிலான தலைமையைச் சந்திப்பதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு மலேசிய கூட்டணிக் குழு சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளது.

அப்பிரிவின் தற்காலிகத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்ஜீவன் இதனை கூறினார்.

 இந்த அணுகுமுறையானது அடிமட்ட மக்களின் கருத்துக்களை நேரடியாகக் கேட்டறிதல், உள்ளூர் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் மேலும் பயனுள்ள, மக்கள் மையப்படுத்தப்பட்ட உத்திகளை வகுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சயாப் பிரிவு கட்சியைப் பல்லின சமூகத்துடன் இணைக்கும் ஒரு பாலமாகத் தனது பங்கைத் தொடர்ந்து ஆற்றி, ஆதரவை வலுப்படுத்தி, பலத்தை ஒன்றிணைத்து, மக்களின் குரல்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்.

மக்களின் கொள்கைகள், நேர்மை, போராட்டத்தை தொடர்ந்து பாதுகாத்து வரும் தலைவர் டான்ஸ்ரீ மொஹைடின் யாசின் அவர்களின் தலைமையின் கீழ், எங்கள் விசுவாசம் அப்படியே நிலைத்திருக்கிறது.

இன்னும் சந்தேகம் கொண்டிருப்பவர்களுக்கு, கூட்டணிப் பிரிவு இன்னும் ஒழுங்கமைக்கப்பட்டும், வலிமையாகவும், மேலும் தயாராகவும் எழும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்தப் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. இந்த எழுச்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

அமைப்பு ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட உத்திசார்ந்த திசையை அமைப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, தற்காலிகத் தலைவராக கூட்டணிப் பிரிவின் முதல் கூட்டத்திற்கு அவர்  தலைமை தாங்கினார்.

உண்மையில், கூட்டணிப் பிரிவு இன்னும் வலிமையாக நிற்கிறது என்றும், இப்போது வலுவான உத்வேகம், ஒற்றுமை மற்றும் உறுதியுடன் எழுந்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset