செய்திகள் மலேசியா
பெண்ணிடம் வழப்பறி கொள்ளை: தோட்டத்தொழிலாளி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கங்கார்:
கூர்மையான ஆயுதம் வைத்திருத்தல், பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் காயம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக அரசு துறையைச் சேர்ந்த தோட்டதொழிலாளிக்கு எதிராக இங்குள்ள கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தோட்டத்தொழிலாளி விசாரணை கோரினார். இரு குற்றச்சாட்டுகளையும் முறையாக விசாரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையை அரசு துணை வழக்கறிஞர் முஹம்மத் அலிஃப் ஃபர்ஹான் ஹசான் நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
முதல் குற்றச்சாட்டில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கூர்மையான ஆயுதம் கொண்டிருந்ததாகவும் இரண்டாவது குற்றச்சாட்டில் ஒரு பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் மறு செவிமடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
