செய்திகள் மலேசியா
பெண்ணிடம் வழப்பறி கொள்ளை: தோட்டத்தொழிலாளி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கங்கார்:
கூர்மையான ஆயுதம் வைத்திருத்தல், பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் காயம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக அரசு துறையைச் சேர்ந்த தோட்டதொழிலாளிக்கு எதிராக இங்குள்ள கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தோட்டத்தொழிலாளி விசாரணை கோரினார். இரு குற்றச்சாட்டுகளையும் முறையாக விசாரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையை அரசு துணை வழக்கறிஞர் முஹம்மத் அலிஃப் ஃபர்ஹான் ஹசான் நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
முதல் குற்றச்சாட்டில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கூர்மையான ஆயுதம் கொண்டிருந்ததாகவும் இரண்டாவது குற்றச்சாட்டில் ஒரு பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் மறு செவிமடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
