
செய்திகள் மலேசியா
நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக டத்தோஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் நியமனம்
கோலாலம்பூர்:
புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ ஹாஜி முஹம்மத் காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி.பியாக இருந்த டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைனின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதி நிறைவடையும் நிலையில் இன்று ஜூன் 20ஆம் தேதி பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதிய ஐ.ஜி.பியாக டத்தோஶ்ரீ காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.
மே 2023ஆம் ஆண்டு முதல் புக்கிட் அமானின் சிறப்பு பிரிவின் இயக்குநராக அவர் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm