செய்திகள் மலேசியா
நஜிப் விடுதலையை மதிக்கிறேன்; தாமதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்க வேண்டும்: ரபிசி
கோலாலம்பூர்:
எஸ்ஆர்சி வழக்கில் டத்தோஶ்ரீ நஜிப்பை விடுவித்த நீதிமன்றத்தின் முடிவை நான் மதிக்கிறேன்.
ஆனால் இந்த வழக்கின் தாமதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி வலியுறுத்தினார்.
எஸ்ஆர்சி நிதிகள் தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோச்ஶ்ரீ நஜிப் ரசாக் விடுவிக்கப்பட்டார்.
2019 முதல் நீண்ட காலமாகக் காத்திருக்கும் டத்தோஸ்ரீ நஜிப்பின் இந்த விண்ணப்பத்தின் உரிமையை நான் மதிக்கிறேன்.
அதே வேளையில் இந்த விண்ணப்பத்தை அனுமதிக்கும் நீதிபதி கே. முனியாண்டியின் முடிவையும் நான் மதிக்கிறேன்.
ஆனால் வழக்கைத் தொடங்கத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க வழக்கறிஞர் ஏன் 2019 முதல் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டனர்.
இதற்கான காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை? என்று அவர் கூறினார்.
சாட்சியம் எதுவும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகள் வழக்குத் தொடர்ந்ததாக நீதிபதி முனியாண்டி கூறினார்.
மேலும் ஒரே ஒரு ஒத்திவைப்புடன் வழக்கு விசாரணையைத் தொடர அரசு தரப்பு தயாராக இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரமாகத் தேவையான முக்கியமான ஆவணங்களை இன்னும் பெற்று சேகரிக்காததால்,
இந்த வழக்கை விரைவில் விசாரிக்க அரசு தரப்பு இன்னும் தயாராக இல்லை எனவும் கூறப்பட்டது.
ஆகவே இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தர வேண்டும் என ரபிசி வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
