நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்

கோலாலம்பூர்:

மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வ திருப்பி அனுப்பும் முயற்சியில் பங்கேற்க கத்தாரில் மொத்தம் 323 மலேசியர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆர்வமுள்ளவர்கள் சனிக்கிழமை பங்கேற்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் வரை பதிவு செய்யலாம்.

மலேசியர்களை நாடு திரும்ப அழைத்து வரும் முதல் விமானம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவின் ரியாத் வழியாக புறப்படும்.

இருப்பினும் அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கத்தாருக்கான மலேசிய தூதர் முஹம்மது ஃபைசல் ரசாலி தெரிவித்தார்.

அரசாங்க முயற்சியின் மூலம் மலேசியாவுக்குத் திரும்புவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் படிவங்களை சுமார் 323 மலேசியர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.

டோஹாவில் உள்ள மலேசிய தூதரகம், கத்தாரில் உள்ள மலேசிய சங்கம் பல சமூக ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன் நாட்டில் உள்ள மலேசியர்களை திருப்பி அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த திருப்பி அனுப்பும் முயற்சி தன்னார்வமானது.

மேலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மலேசியர்கள் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும், இதற்குப் பிறகு மற்றொரு திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட வாய்ப்பில்லை 

கத்தாரில் உள்ள மலேசியர்களுடனான ஒரு இணைய கூட்டத்தின்  போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset