
செய்திகள் மலேசியா
இஸ்ரேல் தாக்குதல்: பிரதமர் அன்வார் கண்டனம்
கோலாலம்பூர்:
ஈரான் மீதான இஸ்ரேலின் அண்மைய வான் தாக்குதல்களுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவை அனைத்துலகச் சட்டத்தை மீறும் மற்றும் அரசதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் “தண்டனைக்குரிய” மற்றும் “சினமூட்டப்படாத ” செயல்கள் அவர் என்று வர்ணித்தார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள் தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பிரதமர் அன்வார் கூறினார்.
முழுமையாக எந்தத் தண்டனைக்கும் உட்படாமல் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துலகச் சட்ட மீறலாகும்.
மேலும், உலகளாவிய ஒழுங்கை ஒன்றாக வைத்திருக்கும் விதிமுறைகளை மேலும் சீரழிக்கிறது.
பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்க தீர்க்கமாகச் செயல்படும்
அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் வெளிப்படையாகப் பேச கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற 38-ஆவது ஆசிய-பசிபிக் வட்டமேசை கூட்டத்தில் ஆற்றிய முக்கிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியின் மீது கவனத்தைத் திருப்பிய அன்வார், இடைவிடாத இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து கவலையை வெளிப்படுத்தக்கூடிய புனிதமான அறிவிப்புகளைத் தாண்டி பிற உதவிகளை அதிகமாகத் தேவைப்படுகின்றன.
மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்தவும் உடனடி போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தவும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு தடையின்றி உதவி வழங்குவதை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த அனைத்துலக நடவடிக்கை அவர்களுக்குத் தேவை என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm