நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10,000 சிறை கைதிகள் வெளிநாட்டு பணியாளர்களின் இடங்களை நிரப்புவார்கள்: சைஃபுடின் 

பெந்தோங்:

10,000 சிறை கைதிகள் வெளிநாட்டு பணியாளர்களின் இடங்களை நிரப்புவதைச் சிறைச்சாலை துறை இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

உற்பத்தி, சேவை, தோட்டக் கலை மற்றும் கட்டுமானத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இம்முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

சமூக மறுசீரமைப்பு திட்டம் (Community Rehabilitation Programme), கட்டாய முன்னிலை உத்தரவு (Compulsory Attendance Order, PKW), கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கும் திட்டம், கார்ப்பரேட் ஸ்மார்ட் இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகிய திட்டங்களால் சிறை கைதிகளுக்கு மறுவாழ்விற்கு உதவுகின்றன.

இந்தத் திட்டங்கள் சிறைச்சாலைகளில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளன என்று சைஃபுடின் சுட்டிக் காட்டினார். 
 
கைதிகளால் தயாரிக்கப்படும் துணிப் பொருட்களுக்காக பல நாடுகளிடமிருந்து இந்தத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இன்று பகாங், பெந்தோங் சிறைச்சாலையில் நடைபெற்ற 235-ஆவது சிறைச்சாலை தினக் கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset