
செய்திகள் மலேசியா
10,000 சிறை கைதிகள் வெளிநாட்டு பணியாளர்களின் இடங்களை நிரப்புவார்கள்: சைஃபுடின்
பெந்தோங்:
10,000 சிறை கைதிகள் வெளிநாட்டு பணியாளர்களின் இடங்களை நிரப்புவதைச் சிறைச்சாலை துறை இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
உற்பத்தி, சேவை, தோட்டக் கலை மற்றும் கட்டுமானத் துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இம்முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
சமூக மறுசீரமைப்பு திட்டம் (Community Rehabilitation Programme), கட்டாய முன்னிலை உத்தரவு (Compulsory Attendance Order, PKW), கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கும் திட்டம், கார்ப்பரேட் ஸ்மார்ட் இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகிய திட்டங்களால் சிறை கைதிகளுக்கு மறுவாழ்விற்கு உதவுகின்றன.
இந்தத் திட்டங்கள் சிறைச்சாலைகளில் உள்ள சிறை கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளன என்று சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.
கைதிகளால் தயாரிக்கப்படும் துணிப் பொருட்களுக்காக பல நாடுகளிடமிருந்து இந்தத் துறைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இன்று பகாங், பெந்தோங் சிறைச்சாலையில் நடைபெற்ற 235-ஆவது சிறைச்சாலை தினக் கொண்டாட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm