நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது

லங்காவி:

லங்காவியில் மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம்  இன்று காலை இங்குள்ள குவா, ஜாலான் பாண்டக் மாயாவில் நிகழ்ந்தது.

இங்குள்ள நகைக் கடையில் கத்தி, மிளகாய்ப் பொடியுடன் சம்பந்தப்பட்ட ஆடவர் கொள்ளையடிக்க முயன்றார்.

காலை 11.48 மணியளவில் நடந்த சம்பவத்தில், உள்ளூர்வாசி என்று நம்பப்படும் சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகில் சிறிது நேரத்திலேயே போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வளாகத்தில் ஒரு ஆணும் ஒரு பெண் உதவியாளரும் இருந்ததாக லங்காவி மாவட்ட போலிஸ் தலைவர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.

வளாகத்திற்குள் நுழைந்ததும் முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர், கடை ஊழியர்கள் மீது மிளகாய்ப் பொடியை வீசினார்.

பின்னர் ஒரு கத்தியைப் பயன்படுத்தி கண்ணாடி பேளைகள் உடைத்தார். அதன் பின் சந்தேக நபர் சுமார் 50,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கத்துடன் தப்பிச் சென்றார்.

இருப்பினும், சந்தேக நபர் கடை உரிமையாளர், பொதுமக்களால் துரத்தப்பட்டு, சம்பவ இடத்திற்கு அருகில் ரோந்து  போலிசாரால்  கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset