
செய்திகள் மலேசியா
மலேசியாவில் பெண்களை பணியிடத்தில் ஈர்க்க திறமையான பொருளாதாரம், அதிக ஊதியம் தேவை: லியூ சின் டோங்
கோலாலம்பூர்:
மலேசியாவில் அதிகமான பெண்களை பணியிடத்தில் ஈர்க்க திறமையான பொருளாதாரம், அதிக ஊதியம் தேவை.
முதலீடு, வர்த்தகம், தொழில்துறை துணையமைச்சர் லியூ சின் டோங் இதனை கூறினார்.
மலேசியா அதிக ஊதியத்துடன் கூடிய உயர் திறமையான பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும்.
இதனால் அதிக பெண்களை முறையான பணியிடத்தில் ஈர்க்க முடியும்.
திறமையற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பது பெண்கள் பணியிடத்தில் பங்கேற்பதைத் தடுக்கிறது.
அவர்கள் வேலையில் நுழைந்து தொடர்ந்து இருக்க உதவும் வகையில் சீர்திருத்தங்கள் தேவை.
இதை நாம் மாற்ற வேண்டும். நமது பொருளாதாரம் மதிப்புச் சங்கிலியில் உயர்ந்து வருவதால் நமக்கு அதிக திறமையான தொழிலாளர்கள், அதிக ஊதியங்கள் தேவைப்படுகிறது.
ஒரு இறுக்கமான தொழிலாளர் சந்தை முதலாளிகள் அதிக கவனம் செலுத்த ஊக்குவிக்கும்.
மேலும் பெண்கள் பணியிடத்தில் நீடிக்கவும் பணியிடத்தில் நுழைவது மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் தங்கவும் உதவும் என்று அவர் ஆசியான் மகளிர் பொருளாதார மன்றம் மாநாட்டில் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm