நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம்  மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்

கோலாலம்பூர்:

போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்தி துன் டாய்ம் மனைவி  நைமா காலித்  ஐபிசிசியிடம் புகாரளித்துள்ளார்.

புளூம்பெர்க் கட்டுரை குறித்து கடந்த ஆண்டு நான் போலிசில் புகார் செய்திருந்தேன்,

முன்னாள் நிதியமைச்சரான அவரது கணவர் துன் டாய்ம் ஜைனுடினின் விவகாரங்கள் குறித்த விசாரணையை இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

பெட்டாலிங் ஜெயா போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.

ஆனால் கூடுதல் விசாரணைக்காக அதிகாரிகள் தன்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை.

இதன் அடிப்படையில்  சுயாதீன போலிஸ் நடத்தை ஆணையத்தில் (ஐபிசிசி) புகார் அளிக்கப்பட்டது என்று நைமா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset