
செய்திகள் மலேசியா
இறுதி மரியாதைக்குப் பின் டத்தோஶ்ரீ பழனிவேலுவின் நல்லுடல் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
கோலாலம்பூர்:
அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின் டத்தோஶ்ரீ ஜி. பழனிவேலுவின் நல்லுடல் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மஇகாவின் 8ஆவது தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ பழனிவேல் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் கோலாலம்பூர் பெரிய மருத்துமனையில் மரணமடைந்தார்.
76 வயதான டத்தோஶ்ரீ பழனிவேல் அரசியல் வட்டாரத்தில் மிகவும் அமைதியான தலைவர் என்றாலும் அமைதியாக இருந்துபல சாதனைகளை புரிந்தவர் என பலராலும் போற்றப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மரணமடைந்த டத்தோஶ்ரீ பழனிவேலுவின் உடல் பங்சாரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், மஇகா தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று மதியம் 1 மணியளவில் அவருக்கான இறுதி சடங்குகள் நடந்தன. அதன் பின் அவரின் நல்லுடல் செந்தூலில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டத்தோஶ்ரீ பழனிவேலுவின் பெட்டியின் மீது மஇகா கொடி போர்த்தப்பட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm