நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறுதி மரியாதைக்குப் பின் டத்தோஶ்ரீ பழனிவேலுவின் நல்லுடல் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

கோலாலம்பூர்:

அரசியல் தலைவர்கள், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின் டத்தோஶ்ரீ ஜி. பழனிவேலுவின் நல்லுடல் செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மஇகாவின் 8ஆவது தேசியத் தலைவரான டத்தோஶ்ரீ பழனிவேல் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம்  கோலாலம்பூர் பெரிய மருத்துமனையில் மரணமடைந்தார்.

76 வயதான டத்தோஶ்ரீ பழனிவேல் அரசியல் வட்டாரத்தில் மிகவும் அமைதியான தலைவர் என்றாலும் அமைதியாக இருந்துபல சாதனைகளை புரிந்தவர் என பலராலும் போற்றப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மரணமடைந்த டத்தோஶ்ரீ பழனிவேலுவின் உடல் பங்சாரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

அரசியல் தலைவர்கள், மஇகா தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இன்று மதியம் 1 மணியளவில் அவருக்கான இறுதி சடங்குகள் நடந்தன. அதன் பின் அவரின் நல்லுடல் செந்தூலில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

டத்தோஶ்ரீ பழனிவேலுவின் பெட்டியின் மீது மஇகா கொடி போர்த்தப்பட்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset