நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாரடைப்பு ஏற்பட்ட  தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்

மலாக்கா:

மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்டதாக நம்பப்படும் குழந்தை மரணமடைந்தது.  தந்தையும் இச்சம்பவத்தில் இறந்து விட்டார்.

இச்சம்பவம்  இன்று காலை இங்குள்ள ஜாலான் பெரிகி ஹேங்கில் உள்ள அவர்களது வீட்டில்  நிகந்தது.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனது தந்தையின் கையால் நசுக்கப்பட்ட மூன்று மாத ஆண் குழந்தை இறந்ததாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் காலை 9.30 மணியளவில் குழந்தையின் தாயார் அசுரா அப்துல் மாலிக்  என்பவரால் உறுதி செய்யப்பட்டது.

 மூன்று உடன்பிறப்புகளில் இளையவரான முஹம்மது நூர் டேனியல் நூருல் அபெண்டியை சுகாதார மருத்துவமனைக்கு ஊசி போட அழைத்து செல்வதற்கான அசுரா வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு வந்ததும் தனது கணவர் நூருல் அபெண்டி இப்ராஹிம் என்பவரின் கையின் கீழ் தனது குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அசுரா கூறினார்.

நான் படுக்கையறைக்குள் நுழைந்தபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் இருவரும் மயக்கமடைந்து படுக்கையில் இருப்பதைக் கண்டேன். ஆனால் அங்கு  ரத்தம் ஏதும்  இல்லை.

அந்த நேரத்தில் குழந்தை இன்னும் உயிருடன் இருந்தது. ஆனால் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது என்று எம்பிஎம்பி நிர்வாக உதவியாளராகப் பணிபுரியும் அவர் கூறினார்.

மலாக்கா மருத்துவமனையின் அவசர சிகிச்சை தனது குழந்தையை அழைத்து சென்றேன். ஆனால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இறந்துவிட்டார்.

மேலும்  நூருல் அபென்டி இப்ராஹிமும் மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset