
செய்திகள் மலேசியா
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
புத்ரா ஜெயா:
‘எடிசி சியாட்’ மற்றும் ‘எடிசி காஸ்’ ஆகிய இரு டெலிகிராம் சேனல்கள் மீது மலேசியத் தகவல் தொடர்பு பல்லூட ஆணையம், எம்சிஎம்சி சிவில் வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இரண்டு சேனல்களும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் கீழ் விதிகளை மீறும் உள்ளடக்கத்தைப் பரப்புவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சிதைத்து பொது ஒழுங்கைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு பேச்சுவார்த்தைகள், ஒத்துழைப்பு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், டெலிகிராம் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நீக்க தவறியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்சிஎம்சி தெரிவித்தது.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தடுக்கவும், அத்தகைய உள்ளடக்கத்தை மீண்டும் வெளியிடுவதைத் முடக்கவும் கடைசி முயற்சியாக உயர் நீதிமன்றத்திடமிருந்து இடைக்காலத் தடை உத்தரவை வெற்றிகரமாகப் பெற்றதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
பொது நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:41 pm