
செய்திகள் மலேசியா
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
புத்ரா ஜெயா:
அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் அல்லது முடிவுகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ அறிக்கை வெளியிட அனுமதி இல்லை.
அரசு ஊழியர்கள் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) விதிமுறைகள் 1993 [P.U. (A) 395/1993] இன் துணை ஒழுங்குமுறை 19(1) இன் கீழ் பொது அறிக்கைகளை வெளியிடுவதைத் தடை செய்தல் என்ற சுற்றறிக்கையில் இந்தத் தடை குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பொது சேவை துறை இயக்குநர் Tan Sri Wan Ahmad Dahlan Abdul Aziz ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு அவமானம் விளைவிக்கும் அல்லது களங்கம் விளைவிக்கும் எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடக்கூடாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கை குறித்தும் எந்த விளக்கத்தையும் வழங்கக்கூடாது.
தடையை மீறினால் அரசு ஊழியர்கள் P.U. இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி பணிநீக்கம் உட்பட ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொது சேவைத் துறையின் (JPA) அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று பதிவேற்றப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm