நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பழங்கள் பணக்காரர்களின் உணவாக மாறும் எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரம்பான் தொகுதி பெர்சத்து தலைவர் டத்தோ வி. சரவணக்குமார் இதனை கூறினார்.

அரசாங்கத்தின் புதிய எஸ்எஸ்டி விரிவாக்கம் வரும் ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

இந்த வரி விரிவாக்கம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

குறிப்பாக அவகாடோ பழங்கள் சாப்பிட விரும்புபவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும். இதனால் பணக்காரரகள் தான் வரி செலுத்த வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமரின் கூற்றுப்படி  இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படும் என கருதப்படுகிறது.

ஆனால் பழங்கள் எப்போது பணக்காரர்களின் உணவாக மாறியது. வசதிக் குறைந்த மக்கள் பழங்களை சாப்பிடுவதில்லையா என்ற கேள்விகள் எழுகிறது.

பழங்கள் போன்று எந்ததெந்த பொருட்களுக்கு வரி விதிக்கப்பட போகிறது. இதனால் விலைவாசி உயருமா உட்பட பல கேள்விகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆகையால் அரசாங்கம் இவ்விவகாரத்திற்கு முழுமையான விளக்கம் தர வேண்டும்.

குறிப்பாக  எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை பாதிக்கக்க கூடாது என்று டத்தோ சரவணக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset