
செய்திகள் மலேசியா
5,000 பிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களை பதிவிறக்கம் செய்த பல்கலைக்கழக மாணவர் கூகுள் உதவியுடன் கைது செய்யப்பட்டார்: போலிஸ்
கோலாலம்பூர்:
5,000 பிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களை பதிவிறக்கம் செய்த பல்கலைக்கழக மாணவர் கூகுள் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
பெண்கள், குழந்தைகள் பாலியல் புலனாய்வுப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் இதனை உறுதிப்படுத்தினார்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து புக்கிட் அமான் நடத்திய சோதனையில் 5,000 பிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோக வீடியோ, பெரியவர்களின் ஆபாசப் படங்களை அம்மாணவர் வைத்திருந்த தெரியவந்தது.
20 வயது அந்த சந்தேக நபர் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய ஆபாசப் படங்களை தயாரித்துள்ளார்.
குறிப்பாக பாதிப்பப்பட்ட நான்கு, ஒன்பது வயதுடைய பிள்ளைகள் அவரது உறவினர்கள் ஆவர்.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஜொகூரில் உள்ள கூடாங்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மலேசிய இணைய குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பிரிவு, குற்றவியல் புலனாய்வுத் துறையின் பிரிவு, ஜொகூர் போலிஸ் படை ஆகியவற்றின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் கைத்தொலைபேசியில் 5,000 பிள்ளைகள், பெரயவர்களின் ஆபாசப் படங்கள் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm