
செய்திகள் மலேசியா
இறக்குமதி செய்யப்படும் சில பழங்களுக்கான எஸ்எஸ்டி வரி மறுபரிசீலனை செய்யப்படலாம்: ஜாஹித் ஹமிடி
பாங்கி:
பழங்கள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி ) விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
ஆப்பிள்கள், மாண்டரின் ஆரஞ்சுகள் போன்ற சில பழ வகைகள் வெளிநாட்டிலிருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
இருப்பினும், சில பொருட்களின் மீதான புதிய வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்வது சரியாக இருக்கும் என்றார் அவர்.
இது குறித்து நிதி அமைச்சகமும் பொருளாதார அமைச்சகமும் கருத்தில் கொண்டுள்ளன என்று சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS) ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, மைடின் பேரங்காடி நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் முஹம்மத், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களுக்கு எஸ்எஸ்டி விதிக்கும் அரசின் நடவடிக்கையை நியாயமற்றது எனக் கூறியிருந்தார்.
ஏனெனில் ஆப்பிள்கள், மாண்டரின் ஆரஞ்சுகள் போன்ற பழங்களைக் குறைந்த வருமானம் பெறுபவர்களும் வாங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பான மக்களின் பல தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஜாஹித் ஹமிடி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 19, 2025, 5:07 pm
மிளகாய்ப் பொடியை ஆயுதமாக பயன்படுத்தி நகைக்கடையில் கொள்ளையடித்த ஆடவர் கைது
June 19, 2025, 5:06 pm
பொது அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு ஊழியர்களுக்குத் தடை
June 19, 2025, 5:04 pm
பழங்கள் பணக்காரர்களின் உணவா?; எஸ்எஸ்டி விரிவாக்கம் மக்களை குழப்புகிறது: டத்தோ சரவணக்குமார்
June 19, 2025, 4:33 pm
மாரடைப்பு ஏற்பட்ட தந்தையின் கையால் நசுக்கப்பட்ட குழந்தை மரணம்: தந்தையும் இறந்தார்
June 19, 2025, 4:31 pm
போலிசார் நடவடிக்கை எடுக்காதது குறித்து துன் டாய்ம் மனைவி ஐபிசிசியிடம் புகாரளித்தார்
June 19, 2025, 3:55 pm
இரு டெலிகிராம் சேனல்கள் மீது எம்சிஎம்சி சிவில் வழக்கு பதிவு
June 19, 2025, 3:41 pm