நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறக்குமதி செய்யப்படும் சில பழங்களுக்கான எஸ்எஸ்டி வரி மறுபரிசீலனை செய்யப்படலாம்: ஜாஹித் ஹமிடி

பாங்கி: 

பழங்கள் உட்பட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி ) விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார். 

ஆப்பிள்கள், மாண்டரின் ஆரஞ்சுகள் போன்ற சில பழ வகைகள் வெளிநாட்டிலிருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இருப்பினும், சில பொருட்களின் மீதான புதிய வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்வது சரியாக இருக்கும் என்றார் அவர். 

இது குறித்து நிதி அமைச்சகமும் பொருளாதார அமைச்சகமும் கருத்தில் கொண்டுள்ளன என்று சமூக மேம்பாட்டுத் துறை (KEMAS) ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில்  அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மைடின் பேரங்காடி நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் முஹம்மத், இறக்குமதி செய்யப்பட்ட பழங்களுக்கு எஸ்எஸ்டி விதிக்கும் அரசின் நடவடிக்கையை நியாயமற்றது எனக் கூறியிருந்தார்.

ஏனெனில் ஆப்பிள்கள், மாண்டரின் ஆரஞ்சுகள் போன்ற பழங்களைக் குறைந்த வருமானம் பெறுபவர்களும் வாங்குவதாக அவர் குறிப்பிட்டார். 

இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பான மக்களின் பல தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஜாஹித் ஹமிடி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset