நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா திமோர் லெஸ்தேவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது; ஆசியானில் சேருவதற்கான விருப்பத்தை ஆதரிக்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியா திமோர் லெஸ்தேவுடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்.

மேலும் ஆசியானில் சேருவதற்கான அதன் விருப்பத்தை ஆதரிக்கிறது.

புத்ராஜெயாவில் திமோர் லெஸ்தே அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவுடனான சந்திப்பின் போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எனது இல்லத்தில் திமோர் லெஸ்தே அதிபர் டாக்டர் ஜோஸ் ராமோஸ் ஹோர்டாவின் வருகை தந்தார்.

மலேசியாவிற்கும் திமோர் லெஸ்தேவிற்கும் இடையிலான நெருங்கிய உறவின் வெளிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அவரின் வருகை அமைந்திருந்த்து.

மேலும் நிலைத்தன்மை, பகிரப்பட்ட செழிப்புக்காக வட்டார ஒருங்கிணைப்பு செயல்முறையை ஆதரிப்பதில் மலேசியா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset