செய்திகள் மலேசியா
பிரிக்பீல்ட்சில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பர்களையும் காயமடைந்தவர்களையும் ஏன் காவலில் வைக்க வேண்டும்?: வழக்கறிஞர்
கோலாலம்பூர்:
பிரிக்பீல்ட்சில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பர்களையும் காயமடைந்தவர்களையும் ஏன் காவலில் வைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா நீதிமன்றத்தில் இக்கேள்வியை எழுப்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களுக்கு எதிராக போலிசார் தாக்கல் செய்த ஏழு நாள் தடுப்புக்காவல் விண்ணப்பத்தை இன்று நீதிபதி நிராகரித்தார்.
வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவாவின் சமர்ப்பிப்புகளில் திருப்தி அடைந்த பின்னர் நீதிபதி ஐனூர் சுஹாடா ஜெஃப்ரி இந்த முடிவை எடுத்தார்.
எனது வாடிக்கையாளர்கள் அனைவரும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள் அல்ல.
மாறாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள். மரணமடைந்தவருடன் மேஜையில் அமர்ந்திருந்திருந்தனர்.
அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அல்ல. அவர்கள் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள். தாக்குதலுக்கு இலக்கானவர்களும் கூட என்று அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஐந்து நபர்களுக்கு எதிராக போலிசாரால் சமர்ப்பிக்கப்பட்ட தடுப்பு காவல் விண்ணப்ப நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டேன்.
கொலை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் ஏழு நாள் காவலில் வைக்க போலிசார் விண்ணப்பித்தனர்.
ஆனால் எனது வாடிக்கையாளர்கள் யாரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என்ற அடிப்படையில் அது ஆட்சேபிக்கப்பட்டதாக சிவநந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
