நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் 8ஆவது தலைவர் டத்தோஶ்ரீ பழனிவேல் இன்று காலமானார்

கோலாலம்பூர்:

மஇகாவின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ ஜி. பழனிவேல் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

76 வயதான டத்தோஶ்ரீ பழனிவேல் கடந்த ஒரு வாரக் காலமாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார் என மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னதாக டத்தோஶ்ரீ பழனிவேல் மஇகாவின் 8ஆவது தலைவராக சிறப்பாக சேவையாற்றினார்.

அதே வேளையில் கடந்த 1990, 1995,1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதே தொகுதியில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

பின் 2013ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.

ஆரம்பத்தில் அவர் தேசிய ஒற்றுமை, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சின்  நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

அதன் பிறகு கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணையமைச்சர், மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துறை  துணையமைச்சர், தோட்டத் தொழில்கள், மூலப் பொருட்கள் துறை  துணையமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

2011ஆம் ஆண்டு அவர்  பிரதமர் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்   இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

மஇகா தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பின் அவர் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவு மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset