நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா-அமெரிக்கா வரிவிதிப்பு பேச்சு வார்த்தை தொடர்கிறது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பரஸ்பர வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

ஜூலை 8-ஆம் தேதியுடன் தற்காலிக பரஸ்பர வரி விதிப்பிற்கான விலக்கு முடிவடையவுள்ளது. 

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த அண்மைய தகவல்களை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர்  Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz, இரண்டாம் நிதியமைச்சர் Datuk Seri Amir Hamzah Azizan ஆகியோர் தனது தெரிவித்ததைப் பிரதமர் உறுதிப்படுத்தினார். 

அமெரிக்காவுடனான சந்திப்பின் போது Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz, Datuk Seri Amir Hamzah Azizan  இருவரும், மலேசியாவுக்கான நலன்களைப் பாதுகாப்பதின் அவசியம் மட்டுமல்ல, ஆசியான் நாடுகளுக்கான நலன்கள் குறித்து வலியுறுத்தியதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

மற்ற ஆசியான் நாட்டு தலைவர்களும் இது போல் செயல்பட வேண்டும் என்று  இன்று நடைபெற்ற 38-ஆவது ஆசிய பசிபிக் வட்டமேசை சந்திப்பின் உரையில் பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset