
செய்திகள் உலகம்
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
துபாய்:
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் இருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
6 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
துபாயில் உள்ள மெரினா பின்னாக்கிள் பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேல் தளத்தில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கட்டிடத்தில் மொத்தம் 764 வீடுகளில் உள்ள நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm