நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உணவுக்காக வரிசையில் நின்ற 30 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

காசா:

மனிதாபிமான உதவிக்காக வரிசையில் நின்ற மக்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வடக்கு பாலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு காசாவில் பதிவான சம்பவம் தொடர்பான எந்த இறப்புகளும் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தந்திரோபாய இடைநிறுத்தத்தின் நான்காவது நாளில் நுழைந்த போதிலும், காசா மக்களின் உயிர்கள் பட்டினி,  ஊட்டச்சத்து குறைபாட்டால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நிலைமையை மோசமாக்கும் வகையில், பாலஸ்தீனியர்கள் உதவி பெற முயன்றபோது இஸ்ரேலிய  ஆட்சியின் கொடுமைகளுக்கு தொடர்ந்து பலியாகி வந்தனர்.

காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்சல் கூறுகையில்,

கொல்லப்பட்ட 30 பேரைத் தவிர, வடக்கு காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குடியிருப்பாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 300 பேர் காயமடைந்தனர் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset