நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல் 

தெஹ்ரான்: 

ஈரான், அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையிலான அனுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் சய்யித் அல்புசய்டி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டு அனுசக்தி ஒப்பந்தம் குறித்த மாற்று நடவடிக்கையைப் பற்றி விவாதிக்கவும் அனுசக்தி கட்டுப்பாடுகள் குறித்து பேசவும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. 

பேச்சுவார்த்தை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டாலும் இரு நாடுகளிலும் அமைதியை நிலைநாட்ட அரச தந்திர உறவுகள் பேணப்படும் என்று அல்புசய்டி சொன்னார். 

அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இதற்கு ஓமான் நாடு நடுவராக இருந்து செயல்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset