
செய்திகள் மலேசியா
உப்சி மாணவர்கள் உட்படுத்திய விபத்து: பேருந்து ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கிரிக்:
அபாயகரமான முறையில் பேருந்தைச் செலுத்தி விபத்துக்குள்ளாகி 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதான ஃபாடில் சுல்கிஃப்ளி இந்த குற்றத்தை மறுத்தார்.
அவர் மீது 15 குற்றங்கள் சுமத்தப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் முஹம்மத் ஃபிர்டாவொஸ் நோர் அஸ்லான் குற்றச்சாட்டை வாசித்தார்.
1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்ஷன் 41(1)இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரன்டுமே விதிக்கப்படலாம்.
மேலும், அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாக குற்றவியல் சட்டம் செக்ஷன் 42(1)இன் கீழ் இன்னொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு திரெங்கானு ஜெர்த்தேவிலிருந்து உப்சி பல்கலைக்கழகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த கோர விபத்து கிரிக் பகுதியில் நிகழ்ந்தது.
இதில் 15 உப்சி கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் பலியாயினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 1:41 pm
வேலை செய்யும் அமைச்சர்களை சாடுவதும் கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பதும் வழக்கமாகிவிட்டது: பிரதமர்
June 14, 2025, 1:39 pm
2026 ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்: பிரதமர்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm