
செய்திகள் மலேசியா
இந்து சமய வளர்ச்சிக்கான தொடர் திட்டங்களை மேற்கொள்ளும் லாபுவான் திருமுருகன் ஆலய நிர்வாகத்தை டான்ஸ்ரீ நடராஜா, டத்தோ சிவக்குமார் பாராட்டினர்
லாபுவான்:
இந்து சமய வளர்ச்சிக்கான தொடர் திட்டங்களை மேற்கொள்ளும் லாபுவான் திருமுருகன் ஆலய நிர்வாகத்தின் பணி தொடர வேண்டும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
லாபுவானில் உள்ள திருமுருகன் ஆலயத்தில் நடந்த ஒரு சிறப்பு விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலயத் தலைவர் சுப்பிரமணியம், ஆலய நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இவ்வாலயத்திற்கு அவர்கள் சென்றனர்.
இவ்வருகையின் போது ஆலயத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி, செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக டான்ஸ்ரீ டாக்டர் நடராஜா 10,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கினார்.
மேலும் தேவார வகுப்புகள், இந்து சமயக் கல்வ, ஆலயத்தில் நூலகத்தை நிறுவுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் இங்குள்ள சமுதாய மக்கள் பயனடைகின்றனர். இவ்வேளையில் நிர்வாகத்தை அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில் லாபுவான் திருமுருகன் ஆலயம் மஹிமாவில் இணைவதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில் அதற்கான சான்றிதழை டத்தோ சிவக்குமார் ஆலய நிர்வாகத்திடம் வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm