நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்

பெட்டாலிங் ஜெயா: 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசியின் முன்னாள் தலைமை ஆணையர் Dzulkifli Ahmad அதிகாரப்பூர்வமாக அம்னோ கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சியில் இணைவதற்கான தனது கடிதத்தை மெர்பாவ் குடோங் அம்னோ தலைவர் ராம்லி தாவூத்திடம் சமர்பித்துள்ளார்.

அம்னோ கட்சியில் தீவிரமாகச் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக  Dzulkifli Ahmad குறிப்பிட்டார். 

இறைவன் நாடினால், தாசெக் கெலுகோரில் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உதவ முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தான் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்வதாகவும், அம்னோவின் கடந்த கால ஆதிக்கத்தின் காரணமாகவே அக்கட்சியில் இணைய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset