நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸில் உள்ள பிரபல இந்தியர் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம், 2 பேர் காயம்: போலிஸ்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸில் உள்ள பிரபல இந்தியர் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் மரணமடைந்த வேளையில் 2 பேர் காயமடைந்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ்  தலைவர், ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று இரவு சுமார் 10.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று பேர் பல நண்பர்களுடன் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவர்களை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

மற்ற இருவரும் பல்கலைக்கழக மலாயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

போலிஸ் தரப்பு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணை நடத்தி வருகிறது.

இதில் தொடர்புடைய சந்தேக நபர்களையும் தாக்குதலுக்கான நோக்கத்தையும் அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset