
செய்திகள் மலேசியா
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
பெட்டாலிங் ஜெயா:
ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று வெறியுறவு அமைச்சகம, விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் மலேசியர்கள் அங்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என்றும் விஸ்மா புத்ரா கூறியது.
அம்மூன்று நாடுகளிலும் வான்வெளிகளை மூடியுள்ளன.
தற்போதைய சூழலில் மலேசியர்கள் ஈரான், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான தங்களின் பயணங்களை ஒத்தி வைக்குமாறு விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டது.
ஈரானிலுள்ள மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரகத்துடன் தங்கள் தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும் விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் அருகிலுள்ள தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm