நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப்பின் தேசிய பயிற்சி வாரம்; 2 மில்லியன் பேர் பயன் பெறுவதை இலக்காக கொண்டுள்ளது: ஸ்டீவம் சிம்

புக்கிட்ஜாலில்:

எச்ஆர்டி கோர்ப்பின் தேசிய பயிற்சி வாரம் 2 மில்லியன் பேர் பயன் பெறுவதை இலக்காக கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் ஆதரவுடன் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாடு செய்யும் தேசிய பயிற்சி வாரம் திட்டம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

எல்லைகளுக்கு அப்பால் கற்றல் என்ற கருப்பொருளுடன்  இந்த ஆண்டுக்கான பயிற்சி வாரம் நடைபெறுகிறது.

மேலும் ஆசியான் திறன் ஆண்டு 2025ஆம் ஆண்டுடன் இணைந்து தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு இப்பயிற்சி வாரம்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பின்னணி அல்லது வயது வித்தியாசமின்றி அனைத்து மலேசியர்களுக்கும் இலவச கற்றல், பயிற்சிகளை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ஆண்டுக்கான பயிற்சி வாரம் 70,000க்கும் மேற்பட்ட இலவச படிப்புகள் இணையம், நேருக்கு நேர்,  சுயமாகவும் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி வாரம் இன்றும் நாளையும் புக்கிட் ஜாலிலில் நடைபெறுகிறது. அதே வேளையில் இணையம் வாயிலாகவும் இப்பயிற்சிகள் நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் 1 மில்லியன் பேரை இலக்காக கொண்டிருந்தது.

ஆனால் பங்கேற்பாளர்களின் அபார ஆதரவால் இந்த எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புக்கிட்ஜாலிலில் நடைபெற்ற தேசிய பயிற்சி வாரத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset