நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலை செய்யும் அமைச்சர்களை சாடுவதும் கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பதும் வழக்கமாகிவிட்டது: பிரதமர்

புக்கிட்ஜாலில்:

நாட்டில் வேலை செய்யும் அமைச்சர்களை சாடுவதும், கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பதும் வழக்கமாகிவிட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மடானி அரசாங்கத்தின் அமைச்சர்களும் துணையமைச்சர்களும் நாட்டின் வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வேலைகளை செய்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் வேலை செய்யும் அமைச்சர்களை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது மனிதவள அமைச்சராக இருக்கும் ஸ்டீவன் சிம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்.

குறிப்பாக அவர் எப்போதும் தொழிலாளர்களின் நலன், திவேட் எனப்படும் திறன் பயிற்சிகள் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதுபோன்ற அமைச்சர்கள் தான் நமக்கு தேவை.

இருந்தாலும் பலர் அவரை சாடுகின்றனர். அவர் சீனர் என்பதால் இந்த சாடல்கள் அதிகமாக இருக்கிறது.

அவர் சீனர்தான். அதை யாரும் மறுக்கப் போவதில்லை. இந்த பாகுபாடு தவிர்த்து கொண்டு அவரின் சேவையையும் திறனையும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் அமைச்சர்களை சாடும் அந்த தரப்பினர் பதவியை தவறாக பயன்படுத்துபவர்களையும் கொள்ளையடிப்பவர்களையும் ஆதரிக்கின்றனர்.

இதில் என்ன நியாயம் உள்ளது என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset