
செய்திகள் மலேசியா
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
சண்டாகான்:
மலேசியாவின் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க மரங்களுக்கு நடுவே நடைபாதை (Historical Tree Trail) சபா சண்டாகானில் இம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நடைபாதையில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 42 மரங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் ஒவ்வொன்றிலும் QR குறியீடுகள் நிறுவப்பட்டுள்ளன.
மக்கள் இந்த குறியீடுகளை ஸ்கேன் செய்து, அந்த மரங்கள் பற்றிய வரலாறு, விஞ்ஞான மற்றும் கலாச்சார தகவல்களைப் பெற முடியும்.
சண்டாகான் ஹெரிடேஜ் ட்ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த நடைபாதை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) “முதல் வரலாற்று மர நடைபாதை” என்ற பெயரில் பதிவு செய்யப்பட உள்ளது.
தொடக்க விழா ஜூன் 28ஆம் தேதி நடைபெறுகிறது. சுமார் 200 பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
நடைபாதையில் பழமையான மசூதி, கோயில், சர்ச், காலனிய ஆட்சி கால கட்டடங்கள் மற்றும் புகழ்பெற்ற ஆக்னெஸ் கெய்த் இல்லம் உள்ளிட்ட முக்கிய வரலாற்று இடங்களும் காணக்கூடியவை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm