நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று நிலைகளைக் கடந்து தான்  மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்

கோலாலம்பூர்:

மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் ப. பிரபாகரன் இதனை கூறினார்.

மலேசிய இந்திய சமூக சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்ட மானியம் 2025இன் கீழ் 1,332 விண்ணப்பங்களை மித்ரா பெற்றது.

கடந்தாண்டு டிசம்பர் 2 முதல்  இவ்வாண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை இந்த விண்ணப்பத்திற்கான அவகாசம் திறக்கப்பட்டிருந்தது.

இதன் மொத்த மதிப்பு 564 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் மேலாண்மை வழிகாட்டுதல்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி மூன்று நிலை மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுகின்றன.

திரையிடல், மித்ரா பணிக்குழுவில் சான்றிதழ், மித்ராவின்  வழிகாட்டுதல் குழுவின் ஆய்வு ஆகியவை இந்த மூன்று நிலைகளாகும்.

இறுதியில்  இந்த விண்ணப்பங்கள் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

மித்ரா மானியத்திற்கான விண்ணப்பங்களையும், முதல் தொடரில் சான்றளிக்கப்பட்ட மொத்தம் 45 திட்ட முன்மொழிவுகளையும் பரிசீலித்து வருகிறது.

மேலும் அவை பிரதமர் அலுவலகத்திற்கு பரிசீலனை,  ஒப்புதலுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

பொறுமையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நன்றி என்று பிரபாகரன் கூறினார்.

முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி விநியோகிப்பதில் மித்ராவின் தாமதத்தைத் தீர்க்குமாறு ஜசெகவின் செனட்டர் ஒருவர் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset