
செய்திகள் மலேசியா
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்: வேதகுமார்
கோலாலம்பூர்:
சுற்றுலா விசாவில் வருபவர்கள் திருமண ஏற்பாட்டு துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்.
டபள்யூபிஏஎம் எனப்படுன் மலேசிய திருமண நிபுணத்துவ ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேதகுமார் கூறினார்.
நாட்டில் அதிகமானோர் இந்திய திருமணங்களை முறையாக ஏற்பாட்டு செய்யும் துறையில் ஈடுப்பட்டுள்ளனர்.
வாழை மரம், தோரணம் கட்டுவதில் இருந்து ஐயர்கள் வரை அனைத்து ஏற்பாடுகளையும் இவர்கள் பார்த்துக் கொள்கின்றனர்.
இவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தான் டபள்யூபிஏஎம் தொடங்கப்பட்டது.
இதை அமைப்பாக பதிவு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே வேளையில் டபள்யூபிஏஎம் ஒன்றுக்கூடல் விழா வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் ஷாஆலம் டிஎஸ்ஆர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் துறையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு இடையே நல்லதொரு உறவை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த விழாவில் முதன்மை நோக்கமாகும்.
அதேவேளையில் இந்தத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் டபள்யூபிஏஎம் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து வியாபாரம் செய்பவர்களை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.
ஆனால் சுற்றுலாவை விசாவில் இங்கு வந்து இங்கு தொழில் செய்பவர்கள் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
காரணம் அவர்கள் நாங்கள் செய்யும் வேலைகளை செய்து எங்களுக்கே பெரும் சவாலாக உள்ளனர்.
இதைத் தவிர்த்து இந்த துறையில் உள்ள விலை வேறுபாடு பிரச்சனைகள், குறிப்பிட்ட மண்டபங்கள் அல்லது ஆலயங்களை பயன்படுத்தும்போது அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவது உட்பட பல பிரச்சினைகளை இந்த துறையினர் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு காண்பதுடன் குறிப்பாக குரல் கொடுக்கும் நோக்கில் தான் இந்த டபள்யூபிஏஎம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆகவே திருமண ஏற்பாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என வேதகுமார் கேட்டுக்கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
June 13, 2025, 5:23 pm