நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூசோப் ராவ்தர் வழக்கின்  தீர்ப்பை போலிஸ்  மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி

கோலாலம்பூர்:

யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும் என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

யூசோப் ராவ்தர் வழக்கு விசாரணையின் முழு தீர்ப்பையும் போலிஸ் இன்னும் காத்திருக்கிறது.

மேலும் விசாரணையின் போது ஏதேனும் பலவீனங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க மறுபரிசீலனை செய்யும்.

உள் மதிப்பீடு, மறுஆய்வு மூலம் விசாரணைகளின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்த தனது துறை தயாராக உள்ளது.

யூசோப் ராவ்தர் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அனைத்து தரப்பினரும் சமர்ப்பித்த எதிர்வினைகள்,  கருத்துக்களை போலிஸ்  கவனத்தில் கொள்கிறது.

குறிப்பாக இத்தீர்ப்பை போலிஸ் மதிக்கிறது. வரவேற்கிறது.

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு நீதி,  மனித உரிமைகளின் கொள்கைகளை தொடர்ந்து நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கான உன்னதமான விருப்பத்தை இந்தக் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset