
செய்திகள் மலேசியா
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
கோலாலம்பூர்:
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி யூசோப் ராவ்தர் பிரதமருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த அறிக்கை தொடர்பாக பிரதமரிடம் வாக்குமூலம் பெற வேண்டிய அவசியமில்லை.
யூசோப்பின் காரில் போதைப்பொருள், துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிக்கை விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஆரம்ப கட்டத்தில் யூசோப் ராவ்த்தர் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இந்த வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த கட்டத்தில் போலிஸ் இரண்டு வழக்குகளுக்கும் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தது.
மேலும் அந்த நேரத்தில் கிடைத்த ஆதாரங்கள், விசாரணையை முடிக்க வேறு எந்த தரப்பினரையும் அழைக்காமல் யூசோப் ராவ்த்தர் மீது குற்றம் சாட்ட போதுமானதாக இருந்தன என்று திருப்தி அடைந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 8:50 pm
நமக்கு வழிகாட்டியான நமது தந்தையை போற்றுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
June 14, 2025, 3:05 pm
இலக்கவியல் மாற்றத்தை செயல்படுத்த ஊடகங்களுக்கு RM30 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார்
June 14, 2025, 2:56 pm
ஏர் ஆசியாவில் ஊடகவியலாளர்களுக்கு 50% கழிவு : ஃபஹ்மி ஃபட்சில் அறிவிப்பு
June 14, 2025, 2:41 pm
மாஹ்சா பல்கலைக்கழகத்தின் கல்வி உதவிக்கு மத சாயம் பூச வேண்டாம்: டான்ஸ்ரீ முஹம்மத் ஹனிபா
June 14, 2025, 1:41 pm
வேலை செய்யும் அமைச்சர்களை சாடுவதும் கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பதும் வழக்கமாகிவிட்டது: பிரதமர்
June 14, 2025, 1:39 pm