நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி

கோலாலம்பூர்:

யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்  வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி யூசோப் ராவ்தர் பிரதமருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த அறிக்கை தொடர்பாக பிரதமரிடம் வாக்குமூலம் பெற வேண்டிய அவசியமில்லை.

யூசோப்பின் காரில் போதைப்பொருள், துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிக்கை விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஆரம்ப கட்டத்தில் யூசோப் ராவ்த்தர் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இந்த வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

அந்த கட்டத்தில் போலிஸ் இரண்டு வழக்குகளுக்கும் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தது.

மேலும் அந்த நேரத்தில் கிடைத்த ஆதாரங்கள், விசாரணையை முடிக்க வேறு எந்த தரப்பினரையும் அழைக்காமல் யூசோப் ராவ்த்தர் மீது குற்றம் சாட்ட போதுமானதாக இருந்தன என்று திருப்தி அடைந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset