
செய்திகள் மலேசியா
அக்டோபர் 1 முதல் வேகக் கட்டுப்பாடு கருவி சோதனை கட்டாயம்: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பேருந்துகள், கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனம் (Speed Limitation Device - SLD) சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்பட்ட பயண மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள், 3,500 கிலோகிராம் எடைக்கு அதிகமான பொருள்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் வேகக் கட்டுப்பாட்டு சாதனம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்றார் அவர்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை வேகக் கட்டுப்பாட்டு சாதனம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல், சோதனை அறிக்கையை வாகனத் உற்பத்தியாளர், போக்குவரத்து துறையால் (JPJ) அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப சேவை நிறுவனம், அங்கீகரித்த சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஆகியோரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
இந்தச் சான்றிதழ் எப்போதும் வாகனத்தில் வைத்திருப்பது கட்டாயம் என்றும் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கையின் போது இது தேவைப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எல்லா பேருந்துகள், கனரக வாகனங்களும் தேசிய வேக வரம்பான 90 கிமீ/மணி விதியைப் பின்பற்றும் வகையில் வேகக் கட்டுப்பாட்டு கருவி வடிவமைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்வார்கள் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm
13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்
June 13, 2025, 11:05 pm
யூசோப் ராவ்தர் வழக்கின் தீர்ப்பை போலிஸ் மறுபரிசீலனை செய்யும்: ஐஜிபி
June 13, 2025, 11:04 pm
யூசோப் ராவ்தர் வழக்கில் பிரதமரிடம் வாக்குமூலம் எடுக்க வேண்டிய அவசியமில்லை: ஐஜபி
June 13, 2025, 5:23 pm