நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும்: பிரதமர் அன்வார் தகவல் 

கோலாலம்பூர்: 

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையில் மலேசியா நிச்சயமாக கலந்து கொள்ளும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

மலேசியா அதன் பிரதிநிதியை ஐநா சபையின் பொதுப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுப்பும் என்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநாட்ட மலேசியா அதன் நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் என்று அவர் சொன்னார். 

மலேசியா மட்டுமல்லாமல் எந்தவொரு நாட்டிற்கு வருகை தருவதற்கு உரிமை உள்ளது என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் சொன்னார். 

முன்னதாக, செராஸில் உள்ள மஸ்ஜித் அஸ்ஸுபாயிர் அவ்வான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் இந்த ஐநா கூட்டத்தில் அனைத்து நாடுகளும் கலந்து கொள்ள கூடாது என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset