நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் விதிப்பு 

மலாக்கா: 

மலாக்காவில் தாய், அண்ணனைக் கொலை செய்த 17 வயதுடைய இளைஞருக்கு ஒரு வாரம் தடுப்பு காவல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. 

போலீஸ் விசாரணைக்காக இந்த தடுப்பு காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆயிர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. 

கொலை செய்யப்பட்டவர்களில் 51 வயது தாய் ஒருவரும் 21 வயது அண்ணன் ஒருவரும் அடங்குவர். மற்றொரு சகோதரர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

படிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் தாம் இந்த கொலை குற்றத்தைப் புரிந்ததாக 17 வயதுடைய சந்தேக நபர் ஒப்புக்கொண்டான். அவனை போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset