நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் பாதிக்கப்பட்ட உப்சி மாணவர்களை நேரில் நலம் விசாரித்தார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் 

தைப்பிங்: 

கடந்த திங்கட்கிழமை கிரிக்கில் நிகழ்ந்த மோசமான பேருந்து விபத்தில் 15 உப்சி மாணவர்கள் பலியான வேளையில் இதர மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட இதர மாணவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் பிரதமர் அன்வாரின் துணைவியார் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் 

தைப்பிங் மருத்துவமனைக்கு வந்த வான் அஸிஸா, அங்கு சிகிச்சை பெற்று வரும் நான்கு மாணவர்களிடம் நலம் விசாரித்து தனிப்பட்ட உதவிகளை வழங்கினார். 

திரெங்கானு மாநில ஜெர்த்தே பகுதியிலிருந்து தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கிரிக் பகுதியில் விபத்துக்குள்ளானது. 

பேருந்து ஓட்டுநர், பணியாளர் உட்பட 33 பேர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டனர்

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset