நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்: மலேசியா கண்டனம் 

கோலாலம்பூர்: 

ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலின் காட்டுமிராண்டி தனமான தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இதனால் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் தோல்வி காணப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை சீர்க்குலைக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் இந்த கீழறுப்பு நடவடிக்கையைப் பார்த்து அனைத்துலக சமூகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset