நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியை மோதிய கார் விபத்துக்குள்ளானது: இருவர் பலி, அறுவர் காயம் 

லிபிஸ்: 

காரும் லாரியும் உட்படுத்திய சாலை விபத்தில் இருவர் பலியான வேளையில் அறுவர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கம்போங் செகார் பெராவின் அருகில் உள்ள ஜாலான் லிங்காரான் தெங்கா உத்தாமா எனும் பகுதியில் நிகழ்ந்தது. 

கிள்ளானிலிருந்து கோத்தா பாரு நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்த வேளையில் அறுவரும் லிபிஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1)இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது என்று லிபிஸ் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன் இஸ்மாயில் மான் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset