
செய்திகள் மலேசியா
யூசோஃப் ராவுத்தர் வழக்கின் முடிவு குறித்து ஆருடங்கள் வேண்டாம்: தேசிய சட்டத்துறை அலுவலகம் அறிக்கை வெளியீடு
கோலாலம்பூர்:
போதைப்பொருள் விநியோகம், போலி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
அவரை தற்காப்பு வாதத்திற்கு அழைக்காமலேயே நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த வழக்கு தற்போது நாட்டு மக்களின் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் தரப்பு குற்றங்களுக்கான முகாந்திரத்தை நிரூபிக்க தவறியதை அடுத்து நீதிபதி டத்தோ ஜாமில் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
இந்நிலையில் யூசோஃப் ராவுத்தருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது முறையான நீதித்துறையின் நடைமுறைக்கு ஏற்றவகையில் வழங்கப்பட்டது என்றும் இது குறித்து யாரும் தேவையற்ற ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று AGC அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் முடிவினை தேசிய சட்டத்துறை அலுவலகம் பகுப்பாய்வு செய்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2025, 1:41 pm
வேலை செய்யும் அமைச்சர்களை சாடுவதும் கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பதும் வழக்கமாகிவிட்டது: பிரதமர்
June 14, 2025, 1:39 pm
2026 ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்: பிரதமர்
June 14, 2025, 11:45 am
ஈரான், ஈராக், ஜோர்டான் நாடுகளுக்கு மலேசியர்கள் பயணம் செய்ய வேண்டாம்: விஸ்மா புத்ரா
June 14, 2025, 11:36 am
மலேசியாவின் முதல் வரலாற்று மரங்கள் நடைபாதை சண்டாகானில் திறக்கப்படுகிறது
June 14, 2025, 11:03 am
முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் அம்னோவில் இணைந்தார்
June 13, 2025, 11:07 pm
மூன்று நிலைகளைக் கடந்து தான் மித்ரா மானிய விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன: பிரபாகரன்
June 13, 2025, 11:06 pm