
செய்திகள் மலேசியா
மாணவர் தங்கும் விடுதியை கொண்டுள்ள ஒரே தமிழ்ப்பள்ளியான மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளி பாதுகாக்கப்பட வேண்டும்: பாப்பா ராயுடு
கிள்ளான்:
மாணவர் தங்கும் விடுதியை கொண்டுள்ள ஒரே தமிழ்ப்பள்ளியான ஷாஆலம் மிட்லன்ட்ஸ் தமிழ்ப்பள்ளி முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
ஷாஆலம் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
குறிப்பாக இப்பள்ளியில் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு மாணவர் தங்கும் விடுதியும் உள்ளது.
ஆக இப்பள்ளியும் மாணவர் தங்கும் விடுதியும் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த மாணவர்கள் தங்கும் விடுதியின் பராமரிப்பில் ஏற்படும் சிக்கல்களை பள்ளி வாரியக் குழு உறுப்பினர் உதயசூரியன் கூறினார்.
அதன் அடிப்படையில் இப்பள்ளிக்கு இவ்வாண்டும் 50 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கினேன்.
அடுத்தாண்டு பள்ளிக்கு 50 ஆயிரம் ரிங்கிட், தங்கும் விடுதிக்கு 50 ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் 1 லட்சம் ரிங்கிட் வழங்கப்படும்.
இன்று பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் பாப்பா ராயுடு இதனை அறிவித்தார்.
பள்ளி வாரியத் தலைவர் உதயசூரியன், வாரிய உறுப்பினர்கள் சீரிய நாதன், குமரவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா துணை இயக்குநர் டாக்டர் ரஸிடா, மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் பாண்டியன் உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am