நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா 

கோலாலம்பூர்:

கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அமல்படுத்துவது அவசியமாகும் என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இந்து ஆலயங்கள்  குறித்து கோவில் ஹராம் என்ற வார்த்தை இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தலைதூக்கிய போது இந்த கோவில் திடீரென கோவில் ஹராம்  என்று முத்திரை குத்தப்பட்டது.

பின்னர் நாட்டில் உள்ள பல ஆலயங்கள் சட்டவிரோத கோவில்கள் என்று கூறப்பட்டது.

இந்த கோவில் ஹராம் என்ற வார்த்தை மிகவும் கடுமையானது.

இதுபோன்ற பிரச்சினைகளை கையாள ஒற்றுமை சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.

பிபிபி மத்திய செயலவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ லோகபாலா இதனை கூறினார்.

இன்றை கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் வீடுகளை வாங்கும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று முதலில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இதை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் பி40 குடும்பங்களை சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வசதி குறைந்த அனைத்து இன மக்களையும் அரசாங்கம் அரவணைத்து செல்ல வேண்டும். இதை பினாங்கு மாநில அரசு கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

இதனிடையே கைத்தொலைபேசி தரவுகளை சேகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது தனிநபர் பாதுகாப்பு தரவு சட்டம் 2010 (சட்டம் 709) முரண்பாடாக உள்ளது.

ஆக எம்சிஎம்சி இந்த விவகாரத்தில் நேர்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset