நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்

கோலாலம்பூர்:

அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மீதான விற்பனை, சேவை வரி எஸ்எஸ்டி வரம்பை விரிவுபடுத்துவதை நான் ஆதரிக்கிறேன்.

மேலும் இந்த நடவடிக்கை செல்வந்தர்களுக்கு வரி விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முடிவு அவகாடோ போன்ற விலையுயர்ந்த பழங்களை உண்பவர்களை மட்டுமே பாதிக்கும்.

இப்போது தான் இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரி குறித்து அறிவிப்புகள் வந்தது.

 அதற்குள் அதற்கு எதிராக பேச தொடங்கிவிட்டனர். நாம் லுமுட்டில் பல சிரமபங்களுக்கு மத்தியில் பழம் பயிரிடுகிறோம்.

ஆனால் வாழைப்பழத்தை இறக்குமதி செய்கிறோம். இறக்குமதி செய்யப்பட்ட வாழைப் பழங்கள் எமாஸ் பழங்கள் அல்ல.

ஆகையால் எந்த பழங்களுக்கு வரி என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முதலில் அதைப் படியுங்கள். முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.

இறக்குமதி செய்யப்படும் அவகாடோ போன்ற பழங்களை யார் சாப்பிட விரும்பினாலும் அதை சாப்பிடுங்கள்.

ஆனால் இன்னும் கொஞ்சம் பணம் செலுத்துங்கள். நாங்கள் அவகாடோ போன்ற பழங்களுக்கு வரி விதிக்கிறோம்

பேராக லுமுட்டில் நடந்த மடானி ராக்யாட் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset